புதுக்கோட்டை, மே 29-
மனுசியப்புத்திரி-தேவன் இணையர் எழுதிய ‘‘அதுவொரு கனாக்காலம’’, ‘‘பாலை’’ எனும் இரண்டு கவிதை நூல்கள் வெளியீட்டு விழா தமிழ்நாடு கலை இலக்கி யப் பெருமன்றத்தில் சார்பில் ஞாயிறன்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் நடைபெற்றது.
விழாவிற்கு கிளைத் தலைவர் அண்ட னூர் சுரா தலைமை வகித்தார். நூல்களை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை வெளியிட, எழுத்தாளர் ஆர்.நீலா, டேவிட் மார்டின், ஆ.ஸ்ரீநிவாசன், நாராயணசாமி, வி.தமிழரசு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
கவிஞர் சோலச்சி நூல்களை அறி முகம் செய்து பேசினார். ஜீவாதாசன் வர வேற்க, தேவன் நன்றி கூறினார். நூலாசிரி யர் மனுசியபுத்திரி ஏற்புரை வழங்கினார்.